கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.
அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.
அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.இத்தகைய சிறப்பு மிக்க அன்னாபிஷேகமானது நாளை நம் ஆலயத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அடியார்கள் பூஜையில் கலந்து கொண்டு அருள்பெற்று உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
18/9/2021 புரட்டாதிசனி/பிரதோஷம்
எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை புரட்டாதிச் சனி விரதமும் சனி மஹா பிரதோஷமும் ஒருங்கே இடம்பெற இருப்பதால் ஆலயமானது அடியார்கள் வழிபாட்டிற்காக காலை 9.30 மணியிலிருந்து திறந்திருக்கும். அத்துடன் மதியம் 12 மணிக்கு விஷேட ஹோமமும் மாலை 5.30 மணிக்கு சனிப்பிரதோஷ அபிஷேக வழிபாடுகளும் இடம்பெறும் என்பதை அடியார்களுக்கு அறியத் தருகிறோம். உபயம்: திரு. திருமதி ஜெயக்குமார் குடும்பம்
ஆடிஅமாவாசை 08/08/2021
அன்பான சிவன் அடியார்கட்கு இனிய காலை வணக்கம். நாளை 8/8/2021 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு எமது ஆலயத்தில் மதியம் 12 மணியளவில் விசேட பூசை நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம். ஆலயம் காலை 10 மணியளவில் இருந்து அடியார்களின் பிதிர்க்கடன் வழிபாட்டிற்கு திறந்து இருக்கும். ஓம் சிவாய நமகா🙏
வருடாந்த மஹோற்சவம் 2021
22/6/2021பிரதோஷம்
மாலை 5:30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம்,அதனைத்தொடர்ந்து 6:00 மணிக்கு பிரதோஷபூஜைகள் நடைபெறும்.
தமிழ் வருடப்பிறப்பு

மஹா சிவராத்திரி விஞ்ஞாபனம் 2021

தற்காலிக பூஜை நேரமாற்றம்.
கோறோண(corona) ஊரடங்கு காரணமாக ஆலயத்தில் நடைபெறும் நித்திய பூசைகள் தற்காலிகமாக மாலை6மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதோஷ பூஜை மட்டும் மாலை 5:30மணிக்கு ஆரம்பமாகும்.
வரலட்சுமி பூஜை 31/07/2020
அடியார்களுக்கு வணக்கம்,
இவ்வருடம் 31/07/2020 வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையில் பங்கேற்க உள்ள அடியார்கள் தம் வரவை 0619804485 என்னும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முக்கிய அறிவித்தல்
அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அடியார்களுக்கு,
இவ்வாண்டு 2020 மஹோற்சவ காலத்தின்போது கொரோனா (COVID 19) நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிதிகளுக்கு அமைவாக ஆலயத்திற்குள் ஒரேநேரத்தில் 15 அடியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் அன்றைய உபயகாரர்களுக்கு பூஜை நேரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதன்பின்னர் ஏனைய அடியார்கள் அனுமதிக்கப்படுவார்கள். உற்சவ பூஜையை தொடர்ந்து ஏனைய மெய்யடியார்கள் 15 பக்தர்கள் வீதம் ஆலய வழிபாட்டிற்கும் அர்ச்சனைக்கும் மதிய பூஜையின் பின்னர் 2 மணிவரையும், இரவு பூஜையின் பின்னர் 8.30மணிவரையும் அனுமதிக்கப்படவுள்ளனர். அடியார்கள் ஆலயத்துள் சமூகஇடைவெளியை பேணுவது கட்டாயமாகும். உங்கள் வரவை முன்கூட்டியே 0619804485 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தரல் வரவேற்கப்படுகிறது.
நன்றி.
-ஆலய பரிபாலனசபை.