ஆடிஅமாவாசை 08/08/2021

அன்பான சிவன் அடியார்கட்கு இனிய காலை வணக்கம். நாளை 8/8/2021 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு எமது ஆலயத்தில் மதியம் 12 மணியளவில் விசேட பூசை நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம். ஆலயம் காலை 10 மணியளவில் இருந்து அடியார்களின் பிதிர்க்கடன் வழிபாட்டிற்கு திறந்து இருக்கும். ஓம் சிவாய நமகா🙏

22/6/2021பிரதோஷம்

மாலை 5:30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம்,அதனைத்தொடர்ந்து 6:00 மணிக்கு பிரதோஷபூஜைகள் நடைபெறும்.

தற்காலிக பூஜை நேரமாற்றம்.

கோறோண(corona) ஊரடங்கு காரணமாக ஆலயத்தில் நடைபெறும் நித்திய பூசைகள் தற்காலிகமாக மாலை6மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதோஷ பூஜை மட்டும் மாலை 5:30மணிக்கு ஆரம்பமாகும்.

http://sivatemple.nl/temple-opening-time/

வரலட்சுமி பூஜை 31/07/2020

அடியார்களுக்கு வணக்கம்,

இவ்வருடம் 31/07/2020 வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையில் பங்கேற்க உள்ள அடியார்கள் தம் வரவை 0619804485 என்னும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய அறிவித்தல்

அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அடியார்களுக்கு,

இவ்வாண்டு 2020 மஹோற்சவ காலத்தின்போது கொரோனா (COVID 19) நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிதிகளுக்கு அமைவாக ஆலயத்திற்குள் ஒரேநேரத்தில் 15 அடியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் அன்றைய உபயகாரர்களுக்கு பூஜை நேரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதன்பின்னர் ஏனைய அடியார்கள் அனுமதிக்கப்படுவார்கள். உற்சவ பூஜையை தொடர்ந்து ஏனைய மெய்யடியார்கள் 15 பக்தர்கள் வீதம் ஆலய வழிபாட்டிற்கும் அர்ச்சனைக்கும் மதிய பூஜையின் பின்னர் 2 மணிவரையும், இரவு பூஜையின் பின்னர் 8.30மணிவரையும் அனுமதிக்கப்படவுள்ளனர். அடியார்கள் ஆலயத்துள் சமூகஇடைவெளியை பேணுவது கட்டாயமாகும். உங்கள் வரவை முன்கூட்டியே 0619804485 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தரல் வரவேற்கப்படுகிறது.

நன்றி.

-ஆலய பரிபாலனசபை.

ஆடிஅமாவாசை 20/07/2020

ஆடி அமாவாசை 20/7/2020 திங்கள் அன்று ஆலயமானது காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையும் . மாலை வழமையான நேரத்திற்கும் திறந்திருக்கும். பிதிர்க்கடன் செய்ய விரும்பும் அடியார்கள் இந்த நேரங்களில் முன்னறிவிப்புடன் ஆலயத்திற்கு வரலாம் என்பதை அறியத் தருகிறோம்