மங்களகரமான குரோதி ஆண்டு உத்திராயண கால கும்ப மாச கிருஷ்ணபட்ச சதுர்தசி திதி திருவோணநட்சத்திரத்தில் புதன்கிழமை 26/02/2025 அன்று நமது அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவரத்திரி விழா நான்கு கால பூஜை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது அடியார்கள் வருகைதந்து எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரரின் அருளை பெற்று உய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்வு நேரம். முதல் காலம். 7.30 மணிமுதல் 9 மணி வரை இரண்டாம் காலம் இரவு 9.30 மணிமுதல் 11.30 வரை மூன்றாம் காலம். நடுநிசி 12 முதல் அதிகாலை 1.30 வரை லிங்கோர்ச்சவபூஜை நான்காம் கால பூஜை அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை நடைபெறும் குறிப்பு. அன்றையதினம் ஆலய அன்னதானத்திற்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ விரும்பினால் தரலாம். ஓம் திருச்சிற்றம்பலம்