Maha Shivarathiri 08/03/2024

Arulmigu Sri Arunachaleswarar temple Elberstraat 2Beverwijk MAHA SHIVARATHIRI FESTIVAL 8-3-2024Dear Goddess Devotees! The Auspicious Day of Sobhakrithu year in tamil month of Masi 25th Day (8-3-2024) Friday MAHA SHIVARATHIRI with God’s Grace we are 4 Timings of Special pooja Abhishekam, Alangaram for lord SHIVA for Peace,Unity,Healthy and Wealthy World so join Together to get the Blessing of Lord Shiva. Evening 7.00pm first pooja 8-3-2024 on SIVARATRI Day from 5.00pm to 9-3-2024 morinng 7.00am.Dovotees can Offer Abhishegam to 108 lingeswaras with their Own.We kindly request you to present the pooja materialen andoffering items to the temple inAdvance.Contact 0251-7502550031-0629804485

தேய்பிறை அஷ்டமி 03/03/2024

அன்பார்ந்த அடியார்களே வருகின்றன ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு நமது ஆலயத்தில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை நடைபெறவுள்ளது அடியார்கள் தவறாது வருகைதந்து அருணாசலேஸ்வரர் காலபைரவர் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் மவசிவ வாழ்க வளர்க!Arunachaleswarar temple1946XHBEVERWIJIKTEL.00310619804485

Masi Magam 24/02/2024

Om Shiva! Dear Sivanatis! Next Saturday 24.02.2024 Homam will be held from 9.30 am till 12 noon to Ninnamulai Sametha Arunasaleshwar who blesses our temple in front of Masi face and special pooja with Abhishekam will be completed with Archanai Maheswara Pooja named Rudra Trisati. Thiruvilakku Pooja and Lalita Trisathi Namakunguma Archana will be held at 4.30 pm. We cordially invite the servants to attend without fail and receive the blessings of the omnipotent Ninnamula Ambal Sametha Arunasaleshwar. Arunachaleswara Temple Board Members! Goodness!

மாசி மகம் 24/02/2024

ஓம் சிவ சிவ ஓம்!அன்பார்ந்த சிவனடியார்களே!எதிர்வரும் சனிக்கிழமை 24.02.2024 மாசி மகத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் அருள்பாலிக்கும் உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரருக்கு காலை 9.30 மணி துவக்கம் பகல்12 மணிவரை ஹோமம் நடைபெற்று அபிஷேகத்துடன் விசேட பூஜையும் ருத்ர திரிசதி நாம அர்ச்சனை மகேஸ்வர பூஜையுடன் நிறைவுபெறும்.மாலை 4.30 மணியளவில் திருவிளக்கு பூஜையும் லலிதா திரிசதி நாமகுங்கும அர்ச்சனையும் நடைபெறும்அடியார்கள் தவறாது கலந்துகொண்டு எல்லாம்வல்ல உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாசலேஸ்வரரிண் திருவருளை பெற்றுய்யும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.அருணாசலேஸ்வர ஆலயநிர்வாகசபையினர்கள்!நற்பவி!

தைப்பொங்கல் 15/01/2024

தைப்பொங்கல் தினத்தன்று ஆலையம் காலை 10 மணியில் இருந்து வழிபாட்டுக்கு திறந்திருக்கும் என அறியத்தருகின்றோம்.

சூரன்போர் 18/11/2023

எதிர்வரும் சனிக்கிழமை 18/11/2023 அன்று மாலை 4 மணிக்கு எமது ஆலயத்தில் சூரன்போர் இடம்பெற இருக்கிறது. இச்சமயத்தில் அடியார்கள் அனைத்து அடியார்களும் ஆலயத்துக்கு வருகை தந்து உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.தொடர்ந்து 19/11/2023 அன்று மாலை 5 மணியளவில் முருகன் திருக்கல்யாண வைபவம் இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

அன்னாபிஷேகம் (28/10/2023)

கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.இத்தகைய சிறப்பு மிக்க அன்னாபிஷேகமானது நாளை நம் ஆலயத்தில் வரும் சனிக்கிழமை (28/10/2023) மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. அடியார்கள் பூஜையில் கலந்து கொண்டு அருள்பெற்று உய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய அறிவிப்பு

இந்த வருடம் ஆலயத்தில் ( இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்ட) புதிய சித்திரத்தேரில் எம்பிரான் திருவீதி உலா வர இருக்கிறார். எனவே அடியார்கள் எம்பெருமானின் அற்புத, ஆனந்த ரத பவனியைக் கண்டு உய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.