அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம்!நாளை மாலை பங்குனி உத்தரத்தை முன்னிட்டு நமது ஆலயத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற இருக்கிறது. அடியார்கள் இவ்விழாவில் பங்குகொண்டு எம்பெருமான் அருளைப் பெற்று உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.ஆலயமானது மாலை 5.30 மணியில் இருந்து திறந்திருக்கும் என்பதை அறியத்தருகிறோம்.