முக்கிய அறிவித்தல்

அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அடியார்களுக்கு,

இவ்வாண்டு 2020 மஹோற்சவ காலத்தின்போது கொரோனா (COVID 19) நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிதிகளுக்கு அமைவாக ஆலயத்திற்குள் ஒரேநேரத்தில் 15 அடியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் அன்றைய உபயகாரர்களுக்கு பூஜை நேரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதன்பின்னர் ஏனைய அடியார்கள் அனுமதிக்கப்படுவார்கள். உற்சவ பூஜையை தொடர்ந்து ஏனைய மெய்யடியார்கள் 15 பக்தர்கள் வீதம் ஆலய வழிபாட்டிற்கும் அர்ச்சனைக்கும் மதிய பூஜையின் பின்னர் 2 மணிவரையும், இரவு பூஜையின் பின்னர் 8.30மணிவரையும் அனுமதிக்கப்படவுள்ளனர். அடியார்கள் ஆலயத்துள் சமூகஇடைவெளியை பேணுவது கட்டாயமாகும். உங்கள் வரவை முன்கூட்டியே 0619804485 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தரல் வரவேற்கப்படுகிறது.

நன்றி.

-ஆலய பரிபாலனசபை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *